education

img

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை

சென்னை, ஜூலை 6 மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை (ஜூலை 6)  தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். நீட் தேர்வு முடிவு கடந்த மாதம்(ஜூன்) 5ஆம் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் 20ஆம்  தேதி வரை ஆன் லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

மருத்துவ படிப்பு களில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்த வர்களுக்கான தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் சனிக்கிழமை சென்னையில் வெளி யிட்டார். இதையடுத்து திங்கட்கிழமை (ஜூலை 8) கலந்தாய்வு தொடங்குகிறது. 8-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந் தாய்வு நடைபெறும். 9ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில்உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்பு களுக்காக அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 58756 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றதையடுத்து தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித் துள்ளார்.  ஈரோடு மாணவர் அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் மாணவி இளமதி ஆகியோர் 2, 3வது இடங்களை பெற்றுள்ளனர்.